அ.தி.மு.க.வைச் சேர்ந்த துறைமுகம் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை :_
சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ. கருப்பையா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாலும், பழ. கருப்பையா கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார் ஜெயலலிதா.


