பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில், 2015-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் ஏற்கனவே சிறையிலுள்ள 4 மீனவர்களையும், 69 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்னைக்கு கச்சத் தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என குறிபிட்டுள்ளார்.

