கோவையில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சித்த 213 பேர் கைது செய்யப்பட்டனர் . பிரதமர் மோடி இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஐதரபாத் பல்கலை மாணவன் தற்கொலை செய்தமைக்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் மாணவ, அமைப்பினர் கறுப்புக்கொடி காட்ட ஒன்று திரண்டனர் போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

