தமிழக- இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

Published:

tnசென்னை: தமிழகம் மற்றும் இலங்கையின் மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை வரும் 24ஆம் தேதி சென்னையில் நடத்தத் தயாராக இருப்பதாக தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளது. தமிழக் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முயற்சிகளை மேற்கொண்டார். அதன் காரணமாக சென்னையிலும், கொழும்பிலும் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடம், தேதி போன்றவற்றை, இலங்கை மற்றும் தமிழக அரசிடம் பேசி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிர்ணயித்து வந்தது. இந்நிலையில் 3-ம்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை தேனாம்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மார்ச் 5-ந் தேதி நடத்துவதாக தமிழக தரப்பும், மார்ச் 11-ந் தேதி என்று இலங்கை அரசும் அறிவித்தது. இரு தினங்களுமே இருதரப்புக்கும் சரிவராத நிலையில், தற்போதுன் மார்ச் 24ம் தேதி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்கு, தமிழக அரசு நேற்று எழுதிய கடிதத்தில், வரும் 24 ஆம் தேதி சென்னையில் இருநாட்டு மீனவர்களின் 3வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த தயாராக இருப்பதாக கடிதம் எழுதி உள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img