சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படும் ஆபரேஷன் ஆம்லா திட்டம் இன்று துவங்கியது. இரு நாட்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இந்த ஆபரேஷன் ஆம்லா திட்டம் நடைபெறுகிறது. இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கப்பல்படை, கடலோர காவல் படை, உட்பட பல்வேறு பாதுகாப்பு குழுவினர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்தவும், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊருடுவலைத் தடுக்கவும், ஆண்டுக்கு இரு முறை ஆபரேஷன் ஆம்லா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துவங்கியது ஆபரேஷன் ஆம்லா
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

