சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படும் ஆபரேஷன் ஆம்லா திட்டம் இன்று துவங்கியது. இரு நாட்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இந்த ஆபரேஷன் ஆம்லா திட்டம் நடைபெறுகிறது. இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கப்பல்படை, கடலோர காவல் படை, உட்பட பல்வேறு பாதுகாப்பு குழுவினர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்தவும், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊருடுவலைத் தடுக்கவும், ஆண்டுக்கு இரு முறை ஆபரேஷன் ஆம்லா நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Popular Categories



