மத்திய அரசு மீது மோடியின் சகோதரர் குற்றச்சாட்டு

Published:

prahalat-modi புது தில்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மோடியின் அரசு தவறிவிட்டதாக மோடியின் இளைய சகோதரர் பிரஹ்லாத் குற்றம்சாட்டியுள்ளார். தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அகில இந்திய நியாயவிலைக் கடைகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில், பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரஹ்லாத் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ”மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. எங்கள் போராட்டம் இங்கே நடத்தப்படுவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தோல்வியே காரணம். நான் மேற்கொள்வது எனது சகோதரருக்கு எதிரான போராட்டம் அல்ல. என்னைப் பொறுத்தவரை எனது சகோதரர் மதிப்பு மிக்கவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனாலும், தொழில் ரீதியாக எனது குரலை சகோதரருக்கு முன்பாக எழுப்ப இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். எங்களுடைய பிரச்னைகளை பா.ஜ.க. கண்டு கொள்ளவில்லை என்றால் தில்லி சட்டசபைத் தேர்தலில் நடந்ததுபோல் உத்தரப் பிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களிலும் நடக்கும். நானும் பா.ஜ.க.வின் உறுப்பினர்தான். ஆனாலும், தேசியக் கட்சிகளின் தவறான கொள்கைகளை எதிர்க்கிறேன்” என்றார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img