December 6, 2025, 3:27 PM
29.4 C
Chennai

தோனி, ரெய்னா, கோலியை வீழ்த்த ஐபிஎல் அனுபவம் கைகொடுக்கும்: சொல்கிறார் வங்கதேச வீரர் அல் ஹசன்

shahib-al-hasan மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலிறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதன் இரண்டாவது காலிறுதியில் இந்தியாவும் வங்கதேசமும் மெல்போர்னில் மோதுகின்றன. நேற்று இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன், நாங்கள் உலகக் கோப்பை காலிறுடிப் போட்டியில் முதல் முறையாக விளையாடுகிறோம். வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய போட்டி இது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இது கிரிக்கெட்டில் இன்னொரு சாதாரண ஆட்டம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த மைதானத்தில் போட்டியைக் காண வருவார்கள். இந்த அளவு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மத்தியில் எப்படி நெருக்கடி இல்லாமல் விளையாடுவது என்பது எனக்கு ஓரளவு தெரியும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது அது போன்ற சூழலைச் சந்தித்துள்ளேன். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் ஏறக்குறைய 70 ஆயிரம் ரசிகர்கள் அமரும் அளவு பெரியது. ஆனாலும் மெல்போர்ன் அனுபவம் வித்தியாசம்தான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிடைத்த அனுபவம் மூலம் தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களுக்கு எதிராக திட்டங்களை வகுப்பதில் என்னால் உதவிட முடியும். அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து எனது சக வீரர்களுக்கு தெரிவிப்பேன். இந்தியா நடப்பு உலக சாம்பியன். அந்த அணியின் டாப்-6 வரிசை பேட்ஸ்மேன்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை பெற்றவர்கள். அவர்களை வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் விரைவில் வீழ்த்தினால் போதும். 2007 உலகக் கோப்பையில் இந்தியாவைத் தோற்கடித்தபோது, நாங்கள் அச்சமின்றி விளையாடினோம். அதேபோன்று இப்போதும் விளையாட விரும்புகிறோம். இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இதுவரை நாங்கள் நன்றாக ஆடியுள்ளோம். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியது போன்று செயல்பட்டால், எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது.. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories