புது தில்லி: மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதா ஏழை விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப் போவதாக அறிவித்திருந்த பாத யாத்திரையை அன்னா ஹசாரே திடீரென ஒத்தி வைத்துள்ளார். முன்னதாக, இந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி 1100 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதயாத்திரை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். மகாராஷ்டிரத்தின் வார்தா காந்தி ஆசிரமத்தில் இருந்து இந்த பாதயாத்திரை தொடங்கும் என்றும், ஏப்ரல் 30-ம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் இது நிறைவடையும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அன்னா ஹசாரேவின் இந்த பாதயாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரது உதவியாளர் தத்தா தனியார் டி.வி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
Popular Categories



