பிரதமர் நரேந்தி மோடி, 2014 பாராளுமன்ற தேர்தலில் கட்சி சின்னமான தாமரை வடிவத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் உயர்நீதி மன்றத்தில் நிஷாந்த் தாக்கல் செய்த மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், குஜராத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருவதால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்தி மோடிக்கு எதிராக தொடரப்பட்ட 2 வழக்குகள் மீதும் விசாரணை நடத்தப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


