தமிழ்நாட்டில் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் கோவையில் உலகத்தர பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, மத்திய பல்கலைக்கழகமும், இந்திய மேலாண்மை நிறுவனமும் அமைக்கப்பட்ட நிலையில், உலகத்தர பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் மட்டும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


