இந்தியாவில் பசுவை வணங்கும் இந்துக்களை குறிவைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐ.எஸ். செய்தி பத்திரிக்கையான ’தாபிக்’கில் இத்தகவல் இடம்பெற்று உள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகி உள்ளது.
’தாபிக்’கில் வெளியிடப்பட்டு உள்ள பேட்டியில் குறிப்பிட்டப்பட்டுள்ளதாவது, ஐ.எஸ். தீவிரவாத இயக்க கமாண்டர் தாங்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் எங்களுது பிரிவை பரவசெய்ய விரும்புகிறோம் என்று கூறிஉள்ளான்,. இந்துக்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிடவில்லை என்றும் ஷியா இஸ்லாமியர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்ற தகவலும் இடம்பெற்று உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.


