தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் காங்., துணைத் தலைவர் ராகுல், முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் விரும்புதாக, தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவே காங்கிரஸ் விரும்புகிறது. அப்படி, காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் ராகுல் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர். அவர் தமிழக முதல்வராக வேண்டும் என காங்., விரும்புகிறது. சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை விரைவில் முடிவு செய்யும். கெய்ல் திட்டம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


