தெற்காசிய 12 வது விளையாடி போட்டி சற்று முன்னதாக கவுகாத்தியில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இன்று முதல் 16-ம் தேதி வரை நடக்கிறது. கவுகாத்தியில் 16 வகையான போட்டிகளும், ஷில்லாங்கில் 7 வகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளை 2,500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டியில் தடகளம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, நீச்சல், மல்யுத்தம், கபடி, ஸ்குவாஷ், டென்னிஸ், ஹேண்ட்பால், வில்வித்தை உள்பட 23 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 228 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. தெற்காசிய போட்டியில் இருபாலருக்கும் சரிசமமான அளவில் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டிக்கான இந்திய அணியில் 245 வீராங்கனைகள் உள்பட 521 பேர் இடம் பிடித்துள்ளனர்.


