தம்பிதுரையின் தனி ஆவர்த்தனம்!

thambidurai with modi - 2026

பட்ஜெட் உரையின் போது தம்பிதுரையின் இருக்கை காலியாக இருந்தது. அ.தி.மு.க.,வின் மூத்த அமைச்சர்கள் இருவர், (வேலுமணி & தங்கமணி?) டில்லிக்கு ரகசியமாக வந்தனர். கூட்டணி குறித்த இழுபறிக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், இவர்களுக்கு, பா.ஜ., அழைப்பு விடுத்திருந்தது.

இதுபோன்ற விஷயங்களுக்காக வரும்போது, டில்லி, தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதை, இவர்கள் தவிர்ப்பது வழக்கம். ஒடிசாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சிறப்பு விமானம் மூலம் இருவரும் டில்லி வந்து, அன்று மாலையே சென்னை திரும்பினர்.

தமிழக விவகாரத்தை கையாளும், டில்லி மேலிடத்துடன் பேசிய இவர்கள், கூட்டணி குறித்து, மீண்டும் உறுதிமொழியை அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பிலேயே, சில முக்கியமான விஷயங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன.

பா.ஜ., 12 தொகுதிகள் கேட்டதாகவும், 8 வரை தர சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கடைசி நேரத்தில், 9 அல்லது 10 ஆக உயர வாய்ப்புள்ளது. பா.ஜ., மேலிட வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்திய அதே வேளையில் தான், தம்பிதுரை திடீரென, டில்லியை விட்டு கிளம்பினார்.

பட்ஜெட்டை புறக்கணித்து, புறப்பட்டுச் செல்லும் அளவுக்கு அவருக்கு என்ன முக்கிய அலுவல்? தம்பிதுரை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு சென்றதாக தகவல் வரவே, குழப்பம் மேலும் அதிகரித்தது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தம்பிதுரையின், பட்ஜெட் புறக்கணிப்புக்கும், டில்லியில் அரங்கேறிய ரகசிய பேச்சுக்கும் தொடர்பு உண்டா? ஜனாதிபதி உரை மற்றும் பட்ஜெட் மீதான உரை ஆகியவற்றில், ஒவ்வொரு கட்சியும், பங்கெடுத்துப் பேசுவது வழக்கம்.

இதில், அ.தி.மு.க., சார்பாக, வழக்கமாக பேசும், எம்.பி.,க்ககளின் பெயர்கள் தரப்படவில்லை. ‘பட்ஜெட் மீதான உரையை, வேறு யாரும் பேச வேண்டாம்; நானே பேசுகிறேன்’ என, அ.தி.மு.க., – எம்.பி.,க்களிடம், தம்பிதுரை கறாராக கூறிவிட்டார்..

தம்பிதுரை காங்கிரஸில் சேரப் போகிறார் என்ற வதந்தியும் சிறகடித்துப் பறக்கிறது! அதிமுக பா.ஜ.,கூட்டணிப் பேச்சு அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறும் வேளையில், அதற்கு எதிர்ப்பான நடவடிக்கைகளும், அ.தி.மு.க.,வில் வேகம் பெறுகின்றன.

இதனால் இறுதி முடிவை எடுப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறியும் உச்ச கட்டத்தை எட்டிஉள்ளது.

  • பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Topics

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

Entertainment News

Popular Categories