தம்பிதுரையின் தனி ஆவர்த்தனம்!

thambidurai with modi - 2026

பட்ஜெட் உரையின் போது தம்பிதுரையின் இருக்கை காலியாக இருந்தது. அ.தி.மு.க.,வின் மூத்த அமைச்சர்கள் இருவர், (வேலுமணி & தங்கமணி?) டில்லிக்கு ரகசியமாக வந்தனர். கூட்டணி குறித்த இழுபறிக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், இவர்களுக்கு, பா.ஜ., அழைப்பு விடுத்திருந்தது.

இதுபோன்ற விஷயங்களுக்காக வரும்போது, டில்லி, தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதை, இவர்கள் தவிர்ப்பது வழக்கம். ஒடிசாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சிறப்பு விமானம் மூலம் இருவரும் டில்லி வந்து, அன்று மாலையே சென்னை திரும்பினர்.

தமிழக விவகாரத்தை கையாளும், டில்லி மேலிடத்துடன் பேசிய இவர்கள், கூட்டணி குறித்து, மீண்டும் உறுதிமொழியை அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பிலேயே, சில முக்கியமான விஷயங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன.

பா.ஜ., 12 தொகுதிகள் கேட்டதாகவும், 8 வரை தர சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை கடைசி நேரத்தில், 9 அல்லது 10 ஆக உயர வாய்ப்புள்ளது. பா.ஜ., மேலிட வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்திய அதே வேளையில் தான், தம்பிதுரை திடீரென, டில்லியை விட்டு கிளம்பினார்.

பட்ஜெட்டை புறக்கணித்து, புறப்பட்டுச் செல்லும் அளவுக்கு அவருக்கு என்ன முக்கிய அலுவல்? தம்பிதுரை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு சென்றதாக தகவல் வரவே, குழப்பம் மேலும் அதிகரித்தது.

பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தம்பிதுரையின், பட்ஜெட் புறக்கணிப்புக்கும், டில்லியில் அரங்கேறிய ரகசிய பேச்சுக்கும் தொடர்பு உண்டா? ஜனாதிபதி உரை மற்றும் பட்ஜெட் மீதான உரை ஆகியவற்றில், ஒவ்வொரு கட்சியும், பங்கெடுத்துப் பேசுவது வழக்கம்.

இதில், அ.தி.மு.க., சார்பாக, வழக்கமாக பேசும், எம்.பி.,க்ககளின் பெயர்கள் தரப்படவில்லை. ‘பட்ஜெட் மீதான உரையை, வேறு யாரும் பேச வேண்டாம்; நானே பேசுகிறேன்’ என, அ.தி.மு.க., – எம்.பி.,க்களிடம், தம்பிதுரை கறாராக கூறிவிட்டார்..

தம்பிதுரை காங்கிரஸில் சேரப் போகிறார் என்ற வதந்தியும் சிறகடித்துப் பறக்கிறது! அதிமுக பா.ஜ.,கூட்டணிப் பேச்சு அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறும் வேளையில், அதற்கு எதிர்ப்பான நடவடிக்கைகளும், அ.தி.மு.க.,வில் வேகம் பெறுகின்றன.

இதனால் இறுதி முடிவை எடுப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறியும் உச்ச கட்டத்தை எட்டிஉள்ளது.

  • பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories