இது குறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி அரவிந்த் தீப் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஐ.எஸ். இயக்க ஆதரவாளர் டெல்லிக்கு வந்துள்ளதாக மத்திய உளவுத் துறை மூலம் தனிப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி பகுதியில் இளைஞர் ஒருவர் தனிப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் மும்பையைச் சேர்ந்த இப்ராகிம் சையது என்று தெரிய வந்தது.
ஹரித்துவாரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் நால்வருக்கும் இவர் பணம் கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
என்று தெரிவித்துள்ளார்.


