இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை சந்தித்து பேசி உள்ளார்.
பின்னர், இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் பற்றிய ‘எதிரொலிக்கும் மலைக்குன்றுகள்’ என்ற 30 நிமிட நேர ஆவண படத்தை அவரும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் இணைந்து வெளியிட்டனர்.
அந்த படத்தில், 1,800-களில், தேயிலை தோட்ட வேலைக்காக, இந்திய தமிழர்களை ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு கூட்டிச்சென்றது பற்றியும், தமிழர்களின் இன்றைய நிலை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


