ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு

Published:

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி, தமிழ் நாளிதழ் ஒன்றில் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியானது. அது, தமிழக நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அந்தச் செய்தி வெளியிட்ட நாளிதழின் ஆசிரியர், பதிப்பாளர், அச்சிட்டாளர் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img