முல்லைப் பெரியாறு: கேரள இடையூறைத் தடுக்குமாறு தமிழக அரசு முறையீடு

Mullaiperiyar_dam புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளைத் தடுத்து இடையூறு விளைவிக்காமல் உள்ளே அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால மனுவில் … முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளச் செல்லும் தமிழக அதிகாரிகளை கேரள போலீஸார் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழக அரசின் அதிகாரிகள், வாகனங்கள் அப்பகுதிக்குச் செல்ல எந்த விதத் தடையோ, இடையூறோ ஏற்படுத்தக் கூடாது என்று கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் வழியில் வனப் பகுதியில் உள்ள “முல்லைப் பெரியாறு அணை-வல்லக்கடவு’ சாலையை சீரமைக்குமாறு உச்ச நீதிமன்றம் 2012, ஜூலை 23-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இதுவரை கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உடனே அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் – என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தனது தீர்ப்பை உறுதிப் படுத்திய பின்னர், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு முன்னிலையில் தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் செயல்படுத்தச் சென்றனர். அப்போது கேரள அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவுக்கு மத்திய அரசும், கேரள அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories