புணே: ஐபிஎல் சீசன் 8 தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜேம்ஸ் ஃபாக்னரின் அசத்தலான பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதில் 21 எக்ஸ்ட்ராஸ்களும் அடங்கும். பஞ்சாப் தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளும் ஜான்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அந்த அணியில் ஹூடாவும் (30 ரன்கள், 15 பந்து, 3 சிக்ஸர்), ஜேம்ஸ் ஃபாக்னரும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக அனுரீத் சிங் வீசிய 19-ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என ஃபாக்னர் வெளுத்து வாங்கியதால் அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கிடைத்தது. ஆனால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபாக்னர் கடைசி ஓவரில் மில்லரிடம் கேட்ச் கொடுத்தார். அவர் 46 ரன்கள் (33 பந்து, 2 பவுண்டரி 3 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் தனது பங்குக்கு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்கள் (32 பந்து) எடுத்த நிலையில் ரன் அவுட்டில் வெளியேறினார். இதுவே பஞ்சாப் அணி வீரர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன். தொடர்ந்து விக்கெட்கள் சரிந்ததால், 13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த ஓவரிலேயே மில்லர் (23 ரன்கள்) விளாசிய பந்தை ஃபாக்னர் கேட்ச் பிடித்தார். இதன் பின்னர் பஞ்சாப் அணி தடுமாறத் தொடங்கியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அசத்தலாக விளையாடிய ஃபாக்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

