நளினி தந்தை மறைவுக்கு வைகோ இரங்கல்

Published:

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளாக ஆயுட் கைதியாக இருக்கும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் அவர்கள், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பலவாணபுரத்தில் உள்ள தனது மகன் இல்லத்தில் தங்கி இருந்தபோது நேற்று உயிர் இழந்தார்.

தந்தை உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த நேரத்தில் அவரைப் பார்ப்பற்கு மகள் நளினி பரோல் கேட்டபோது, தமிழக அரசு மறுப்புத் தெரிவித்தது.

நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டபோதும் அவரது தந்தையைக் காண பரோலில் செல்ல தமிழக அரசு மனிதாபிமானம் சிறிதும் இன்றி அனுமதி மறுத்துவிட்டது. நளினியின் தந்தை உயிருக்குப் போராடியபோது பரோல் வழங்க அனுமதி மறுத்த ஜெயலலிதா அரசு, தற்போது அவர் மரணம் அடைந்த பிறகும் மூன்று நாள் பரோல் அனுமதி கேட்டதைத் தராமல், 11 மணி நேரமே பரோல் வழங்கி இருப்பது வேதனை தருகிறது.

தந்தையை இழந்து வாடும் நளினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

என்று குறிப்பிட்டுள்ளார். 

Related articles

Recent articles

spot_img