நாடாளுமன்றத்தில் என்னை பேசவிடுவதில்லை : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Published:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ரோகித் வெமுலா விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பினார்.இதனையடுத்து மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் தான் பேச அனுமதிக்க வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், “விவாதத்திற்கு தயார் என்று கூறும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பேசவிடுவதில்லை. நான் என்ன பேசுவேன் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img