நெல்லை டூ ராமநாதபுரம்! வெற்றி விநாயகர் ஆசியுடன் பிரசாரத்துக்கு புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்!

nainar nagendran1 - 2026நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் இன்று வீட்டில் மற்றும் கோயில்களில் பூஜைகளை செய்து, வெற்றி விநாயகர் ஆசியுடன் ராமநாதபுரத்துக்கு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

தமிழகத்தில் அதிமுக., தலைமையில் அமைந்திருக்கும் தே.ஜ.கூட்டணியில் பாஜக., சார்பில் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரத்துக்காக இன்று நெல்லையில் இருந்து புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்.

nainar nagendran2 - 2026

தனது தந்தை நயினார் தேவர் மற்றும் வீட்டில் உள்ள மூத்தோர்களின் பாதம் வணங்கி வெற்றி விநாயகருக்கு பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து மகாராஜநகர் அதிசய விநாயகர் கோவிலில் வழிபட்டு, பின்னர்  ராமநாதபுரத்துக்கு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காகப் புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்.

nainar nagendran3 - 2026

பாஜக.,வினருக்கு இந்த முறை ராமநாதபுரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. காரணம், காசியும் ராமேஸ்வரமும் இந்துக்களின் வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவ்விரு புனிதத் தலங்களிலும் பாஜக., வென்றே தீர வேண்டும் என்று உறுதியுடன் உள்ளனர். வாராணசி தொகுதியில் நரேந்திரரும் ராமநாதபுரம் தொகுதியில் நாகேந்திரரும் போட்டியிடுகின்றனர் என்று மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர் பாஜக.,வினர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

குறிப்பாக, நரேந்திர மோதியின் தொகுதியான வாராணசி அவரது பணிகளால் மிகப் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கங்கை தூய்மையடைந்துள்ளது. அது போல், ராமநாதபுரமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் மத்தியில் மீண்டும் மோதி அரசு அமையும் போது, ராமநாதபுரத்துக்கு நிதி உதவி அதிகம் கிடைத்து, தொகுதியில் குடிநீர்ப் பிரச்னைகள் குறைந்து, நல்ல வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர் பாஜக.,வினர்.

தற்போது தனுஷ்கோடி, பிரதமர் மோதியின் தயவால் மீண்டும் உருப் பெற்றிருக்கிறது. அதுபோல், அப்துல் கலாம் மணி மண்டபம் சிறப்பிடம் பெற்றுள்ளது. மேலும் இந்தத்தொகுதி வளர்ச்சிப் பாதையில் செல்ல பாஜக., வெற்றி பெற வேண்டும் என்று ஒட்டு மொத்தக் குரலில் கூறுகின்றனர்.

dhanushkoti - 2026

தாமிரபரணி தந்த தாமரை நாயகன் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வருக வருக என்று ராமநாதபுரத்தில் பாஜக.,வினர் உற்ஸாகத்துடன் வரவேற்கக் காத்திருந்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories