சினிமாக்காரர்கள் பிரசாரம் இல்லாமல்… தேர்தல் போலவே தெரியலியாமே…!

udayanidhi - 2026

தேர்தல் என்றால் அது பிரசாரம் இல்லாமலா? தேர்தல் பிரசாரம் என்றால் அது சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் பிரசாரம் இல்லாமலா!?

ஆனால் இந்த முறை சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் அதிதீவிர பிரசாரம் எதுவும் இல்லாதது போல் இருக்கிறது. அதற்கு காரணம், சூடு பட்ட நடிகர்கள்தான்!

ஜெயலலிதா, கருணாநிதி இரு பெரும் சினிமா ஆளுமைகள் இருந்த வரை, சினிமாக்காரர்கள் அவர்களின் பக்கம் ஒதுங்கினார்கள்! விழா எடுப்பதும் வேண்டுகோள் வைப்பதும், அவர்கள் அழைத்தால் பிரசாரத்துக்குச் செல்வதும் என்று அதீத விசுவாசத்துடன் நடந்துகொண்டார்கள். ஆனால் விசுவாசத் தலை மு.கருணாநிதி முன்பு  பொங்கிய பொங்கலால், சினிமாக்காரர்கள் சற்று பின்னோக்கி நகர்ந்தார்கள்.

திமுக.,வுக்காக நகைச்சுவை வடிவேலு களம் இறக்கப்பட்டு, விஜயகாந்தை குறிவைத்து மேடைகளில் அரசியல் பேசிய பின்னர், அவர் திரையுலகில் இருந்தே முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார். இன்னும் வையாபுரி, குண்டுகல்யாணம் போன்ற நகைச்சுவைகள்தான் அரசியல் மேடையில் வந்தனவே ஒழிய, பெரிய அளவில் நடிகர்கள் எவரும் அதன் பின்னர் அரசியல் திரைக்கு முன்னர் தோன்றவில்லை!

இந்நிலையில், இந்தத் தேர்தலிலும் அவ்வாறே நட்சத்திரப் பட்டாளங்கள் பெரிதும் களம் இறங்காமல் உள்ளது. அடிக்கும் வெயில் ஒருபுறம் என்றாலும், ஆளும் தரப்பு, எதிர்தரப்பு என்று நடிகர்களுக்கு உள்ளும் பிளவு ஏற்பட்டு விடுவது இன்னொன்று. இதை விட முக்கியமானது, சமுக ஊடகங்களின் தாக்கம்.

திமுக., தரப்புக்கு என்று சமூக ஊடக குழுக்கள் இயங்குவது போல், இந்து இயக்கங்களுக்கு என்றும் சமூக ஊடகக் குழுக்கள் வலிமையாக இயங்குகின்றன. அவற்றின் தாக்கம், நடிகர்களின் படங்களிலும் எதிர்கால வாழ்க்கையிலும் பலமாக எதிரொலிக்கின்றன. இதன் காரணத்தாலேயே, இப்போதெல்லாம் நடிகர்கள் பலரும் தீவிர அரசியல் பிரசாரக் களத்தில் இறங்கவே அச்சப் படுகின்றனர்.

இந்த விஷயத்தில், ஓய்ந்து விட்டதா நட்சத்திர அரசியல்? என்று மூத்த பத்திரிகையாளர் மாலன் தனது கருத்தை இவ்வாறு முன்வைக்கிறார்….

இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல்.நாளையோடு மனுத்தாக்கல் முடிவடைகிற்து. ஆனால் இதுவரை எந்த சினிமா நடத்திரமும் வேட்பாளராகக் களம் இறங்கவில்லை.

போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் போட்டியிடவில்லை. அனேகமாக எல்லாக் கட்சிகளிலும் சினிமா நட்சத்திரங்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

திமுகவில் உதய நிதி, காங்கிரசில் குஷ்பூ, பாஜகவில் எஸ்.வி.சேகர், அம்முகவில் சி.ஆர்.சரஸ்வதி, மய்யத்தில் ஸ்ரீபிரியா, கோவை சரளா, இப்படி. ஆனால் எவரும் களமிறக்கப்படவில்லை.ஆர்.கே.நகரில் போட்டியிட முனைந்த விஷால் கூட ஆளையே காணோம். கார்த்திக் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். சரத்குமாரின் ஆதரவை அதிமுக கோருகிறது. டி.ஆர்.அமைதி காக்கிறார்

அண்டை மாநிலமான கர்நாடகாவில் சுமலதா, பிரகாஷ் ராஜ் களமிறங்குகிறார்கள். வடக்கே ஹேமாமாலினி. ஆனால் தமிழகத்தில் யாரும் இல்லை. தமிழகத்தில் ஓய்ந்து விட்டதா நட்சத்திர மோகம்? – என்று கேள்வி எழுப்புகிறார்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories