சென்னை: தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணப் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூல் பதிவில் தெரிவிக்கையில்…. ”கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கட்டணம் இல்லாமல் 25 சதவீத மாணவர்களை சேர்க்க வேண்டும். ஆனால் இந்த வருடம் அந்த 25 சதவீத மாணவர்களைக் சேர்க்கப் போவதில்லை என்று நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன்,மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ தனியார் பள்ளிகளின் சங்கத்தினர் திடீரென்று அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே இந்த சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கட்டணத்தை அதிமுக அரசின் கல்வித்துறை கடந்த மூன்று வருடங்களாக செலுத்தவில்லை என்பதையே தனியார் பள்ளி சங்கத்தினர் இந்த முடிவிற்கான காரணமாகக் கூறியிருக்கிறார்கள். சமுதாயத்தில் நிலவும் சமூக -கல்வி அந்தஸ்தை பாதிக்கும் வகையில் தனியார் பள்ளிகளின் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதும், கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டணத்தைக் கொடுக்காமல் அதிமுக அரசு இழுத்தடிப்பதும் முற்றிலும் நியாயமற்றது. கல்வி பெறும் உரிமைச் சட்டம் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான ஒரு உன்னதமான சட்டம். ஆகவே அதிமுக அரசின் நிர்வாக குறைபாடுகளைக் காரணம் காட்டி தனியார் பள்ளிகள் இப்படியொரு முடிவினை எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டின் நாளைய தலைமுறையாகப் போகும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடாமல், சம்பந்தபட்ட தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் அதிமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சமுதாயத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட மாணவர்களும் பயனடையும் விதத்தில் கல்வி உரிமை பெறும் சட்டம் இருக்கிறது. இதன்படி சேர்க்க வேண்டிய 1.43 லட்சம் மாணவர்களில் 11 சதவீதம் பேர்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று அகமதாபாத் ஐஐஎம் ஆய்வு கூறியிருப்பது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றி இப்படி அலட்சியமாக இருந்தால், பிரகாசமான, செழிப்பான தமிழகத்தை உருவாக்க முடியாது என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Hot this week
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
இந்து முன்னணியின் மாநில பொதுக் குழு ஜூன் 21 ஞாயிறு இன்று,...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

