விர்ஜீனியா: அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி இளைஞரான இளம் வயது விவேக் மூர்த்தி, அமெரிக்க நாட்டின் மருத்துவத்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். 2010 டிசம்பரிலேயே விவேக் மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 2013 முதல் அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை தலைவராக இருந்த விவேக் மூர்த்தியை இப்பதவியில் அமர்த்த அதிபர் ஒபாமா முடிவு செய்த போதும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஆதரவாக விவேக் மூர்த்தி கையெழுத்திட்டதால் அந்நாட்டு செனட் சபை அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செயதது. எனினும் 2014 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரமனதாக விவேக் மூர்த்தி இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியபோது; நாடு சந்தித்து வரும் சுகாதார பிரச்னைகளை, தலைவர்களின் ஒத்துழைப்புடனும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், பள்ளிகள், நம்பிக்கையூட்டும் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் களைய தீவிர முயற்சிகள் எடுக்கப்படும். உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மருத்துவர் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வளித்துவிட முடியாது. பல தரப்பட்டவர்களின் பங்களிப்பின் மூலம் உரிய தீர்வு காண முடியும் என்றார்.

