திருமணப் பந்தலுக்குள் லாரி புகுந்து 5 பேர் பலி; பலர் காயம்

Published:

ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி பகுதியில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த தனியார் கூரியர் நிறுவன லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, திருமணப் பந்தலுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பந்தல் சரிந்து விழுந்தது. அதில் சிக்கி 5 பேர் பலியாயினர்; பலர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, கிரேன் மூலம் பந்தலுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img