சென்னை நோக்கியா ஆலை திறப்பதில் நீடிக்கிறது சிக்கல்

Published:

சென்னை: சென்னையில் நோக்கியா ஆலையை மீண்டும் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆலையை குறைந்த தொகைக்கு வாங்க முன்வந்ததால் அதுகுறித்த விற்பனை நடவடிக்கை நிராகரிக்கப்பட்டதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. நோக்கியா ஆலையை வாங்க சரியான வர்த்தக நிறுவனம் கிடைத்துள்ளதால், சென்னையில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதிக்கும்படி தில்லி உயர் நீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் பதார் துரேஸ் அகமது, சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து இன்று விசாரிக்க இயலாது என தெரிவித்த நீதிபதிகள், செப்.7ஆம் தேதிக்குப் பின்னர் இந்த மனுவை விசாரிக்க விரும்பினால் வருமான வரித்துறை சார்பில் பதில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.

Related articles

Recent articles

spot_img