அனுப்பி வைத்த மோடி; வரவேற்ற யோகி! ஜனகபுரி டூ அயோத்தி!

Published:

yogi bus ayodhya - 2026

அயோத்யா: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேபாளத்தில் இருந்து அயோத்யா வந்த முதல் பேருந்தை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

நேபாளத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கே சீதை பிறந்த இடமான ஜனகபுரியில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு, சீதை பிறந்த இடத்தில் இருந்து ராமன் பிறந்த இடமான அயோத்திக்கு ஒரு பஸ் சர்வீஸை துவக்கி வைத்தார்.

welcoming bus janakpuri to ayodhya - 2026

பாரத- நேபாள மக்களை கலாசார ரீதியாக ஒருங்கிணைக்கும் ஓர் அம்சமாக இந்த பஸ் சேவை துவங்கப் பட்டுள்ளது. அதன்படி, சீதை பிறந்த ஜனகபுரியில் இருந்து நேற்று பஸ் சேவையை மோடி துவக்கி வைத்து வழியனுப்பினார்.

ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் சாதுக்கள் சந்நியாசிகள், பெரியவர்கள் திரளான பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img