சென்னை: தமிழகத்தில் மக்கள் முதல்வர் பினாமி முதல்வர் ஆகியோரால் எல்லாவற்றிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சென்னையில் கோபாலபுரத்தில் ஸ்டாலின் வாக்களிக்கும் வாக்குச் சாவடிக்கு வந்து, தன் வாக்காளர் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படிவத்தை நிரப்பிக் கொடுத்து விட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் வாக்காளர் படிவம் ஆதார் எண் இணைப்பு குறித்தும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவத்தை ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே கொடுப்பதாக தன்னிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், கர்நாடகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து, பிரதமரைச் சந்தித்து மேகதாது விவகாரத்தில் மனு கொடுக்கின்றன. அத்தகைய நிலை தமிழகத்தில் இல்லை. ஆளுங்கட்சியான அதிமுக., எதிர்க்கட்சிகளிடம் எதையும் கேட்பதில்லை, கூட்டம் போடுவதில்லை, எதிர்க்கட்சிகளை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஒற்றுமை ஏற்படவும் விடுவதில்லை. இத்தகைய தேக்க நிலைக்குக் காரணம் தமிழகத்தில் மக்கள் முதல்வரும் பினாமி முதல்வரும்தான்.. என்று குற்றம் சாட்டினார்.
I visited my election booth at gopalapuram today, checked my name in electoral roll and linked my Aadhaar Number. I… Posted by M. K. Stalin on Saturday, April 25, 2015


