நாடு முழுக்க அலசி ஆராய்ஞ்சாலும்… தமிழகம்தான் டாப்…!

velloremoneycaptured2 - 2026

மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பறக்கும் படையினர் சோதனை செய்ததில், கோடிக்கணக்கில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகமே உச்சபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் பறக்கும்படை நடத்திய சோதனையில், இதுவரை ரூ.2,628.43 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் பணம் பொருள்கள் பறிமுதலில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது!

தேசிய அளவில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒட்டி அனைத்து மாநிலங்களிலும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்று வருகிறது

இந்த சோதனைகளில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் தங்கம் வெள்ளி வைரம் மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன

நேற்று வரை நாடு முழுவதும் 125 கோடி ரூபாய் பணம் 232.62 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 1168.54 கோடி ரூபாய் மதிப்பில் போதைப்பொருள்கள் 956 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வெள்ளி பொருட்கள் 46.56 கோடி ரூபாய் மதிப்புள்ள இதர பொருள்கள் என 3,105.56 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் தமிழகமே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது தமிழகத்தில் 215.15 கோடி ரூபாய் ரொக்கம் 2004.3 கிலோ தங்கம் 645 கிலோ வெள்ளி என மொத்தம் 933.94 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

பணம் பொருள்கள் பறிமுதலில் குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது! தமிழகத்தில் இன்னும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் பறிமுதல் பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories