வளர்ப்பு நாய்களாம்…: ஆந்திர தெலங்கானா மு தல்வர்கள் குடுமிப்பிடிச் சண்டை

Published:

ஹைதராபாத்: வளர்ப்பு நாய்களை விட்டுச் சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு என்று கூறியுள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சர்ச்சைப் பேச்சு செகந்திராபாத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிப் பொதுக் கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நம் பக்கத்தில் இருக்கும் ஒரு முதல்வர் கிருக்கிடு நாயுடு, மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தவர். பெற்ற தாய்க்கே சோறுபோடாதவர்கள், சித்திக்கு தங்க வளையல் வாங்கித் தருவதாகக் கூறுவது போல உள்ளது அவரது வாக்குறுதிகள். தெலங்கானாவில் அவரது வளர்ப்பு நாய்கள் சில உள்ளன. அவை நம்மைப் பார்த்து குரைக்கின்றன என்று பேசியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img