December 6, 2025, 2:11 AM
26 C
Chennai

சட்டசபை நடுநிலையோடு செயல்படவில்லை-இபிஎஸ்..

974211 1 - 2025
#image_title

தமிழக சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை என்றும், ஆளும்கட்சியினரின் கண் அசைவிற்கு ஏற்ப சபாநாயகர் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவதை நேரலை செய்வதில் அரசு புறக்கணிப்பதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விருத்தாச்சலத்தில் திமுக கவுன்சிலர் 6 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த விவகாரம் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினேன். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நேற்றிரவே புகார் அளித்தும் இன்று காலை வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை, 13 மணி நேரம் கழித்தே கைது செய்துள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய திமுக நபரை காப்பாற்ற இந்த அரசு முயற்சித்தது.
பெண் குழந்தைகள் குறித்து சட்டசபையில் நான் பேசுவதற்கு முன்பும், பின்பும் இருக்கும் காட்சிகளை நேரலையில் காண்பிக்கின்றனர்.

ஆனால், நான் பேசுவதை ஒளிபரப்பாமல் புறக்கணிக்கின்றனர். கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல், பதில் சொல்வதை ஒளிபரப்புகின்றனர்.

சட்டசபை எங்கே ஜனநாயக முறைப்படி நடக்கிறது? சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை; ஆளும்கட்சியினரின் கண் அசைவிற்கு ஏற்ப சபாநாயகர் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்

இதன் பிறகு, சட்டசபையில் நேரடி ஒளிபரப்பு குறித்து விவாதம் நடந்தது. அப்போது பழனிசாமி பேசுகையில், நான் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சபாநாயகர் அப்பாவு அளித்த விளக்கத்தில், நேரடி ஒளிபரப்பு செய்வதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனக்கூறினார். சபாநாயகரின் விளக்கத்தை ஏற்காத அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories