தமிழகத்தில் மே 27-ம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 27 ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் பதிவான ஓட்டுக்கள் மே 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், தேர்தல் நடைமுறைகள் மே 27 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால் அன்று வரை தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்!