மம்தா மீம்ஸ்… பிணையில் வந்த பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்! கூடாது பேச்சு சுதந்திரம் போச்சு: நெட்டிசன்ஸ்!

mamta banarjee priyanka chopra image - 2026 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து மீம்ஸ் வெளியிட்ட பிரியங்கா சர்மாவிற்கு உச்ச நீதிமன்றம், எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால், இது பேச்சு சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல் என்று நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற வித்தியாச உடை அணியும், ‘மெட்காலா’ நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அதில் அவர் அணிந்த உடையும் முடி அலங்காரமும் நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்கு உள்ளானது.

இந்நிலையில் மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடையில் அவருக்கு பதில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் முகத்தை மார்பிங் செய்து, பாஜக., யுவமோர்ச்சாவைச் சேர்ந்த பிரியங்கா சர்மா என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

பிரியங்காவின் பதிவுக்கு கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து திரிணாமுல் கட்சியை சேர்ந்த ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, ஹவுரா போலீசார், பிரியங்கா சர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிரியங்கா சர்மாவுக்கு ஜாமின் வழங்க தயார். அவர் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியது.

அதற்கு, பிரியங்கா சர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது, பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது. இருப்பினும் அவரிடம் மன்னிப்பு கேட்க அறிவுரை வழங்குகிறேன்! அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறினார்.

இதை அடுத்து, பேச்சு சுதந்திரம் என்பது மற்றவரை அவமானப்படுத்துவதற்காக அல்ல எனக் கூறிய நீதிமன்றம், மீம்ஸ் வெளியிட்டதற்காக எழுத்துபூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பிரியங்கா சர்மாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.priyanka sharma - 2026

இருப்பினும் நெட்டிசன்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மோடிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்று பொங்குகின்றனர். ஒரு நாட்டின் பிரதமர் மோடியைக் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் சித்திரித்து மீம்ஸ்கள் கார்டூன்கள் வெளியிட்டனர். ஆனால் அது குறித்தெல்லாம் கவலைப்படாத கண்டுகொள்ளாத உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தன்னுடைய ஒரு தலைப் பட்சமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.

பிரியங்கா மன்னிப்பு கேட்கக்கூடாது என்றும், இது உச்ச நீதிமன்றத்துக்கு அவமானம், கேவலம் இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் தகர்த்தெறிந்துவிட்டது என்றும் கருத்துகளை பலரும் டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories