December 6, 2025, 1:37 PM
29 C
Chennai

மம்தா மீம்ஸ்… பிணையில் வந்த பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்! கூடாது பேச்சு சுதந்திரம் போச்சு: நெட்டிசன்ஸ்!

mamta banarjee priyanka chopra image - 2025 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து மீம்ஸ் வெளியிட்ட பிரியங்கா சர்மாவிற்கு உச்ச நீதிமன்றம், எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால், இது பேச்சு சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல் என்று நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற வித்தியாச உடை அணியும், ‘மெட்காலா’ நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அதில் அவர் அணிந்த உடையும் முடி அலங்காரமும் நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்கு உள்ளானது.

இந்நிலையில் மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடையில் அவருக்கு பதில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் முகத்தை மார்பிங் செய்து, பாஜக., யுவமோர்ச்சாவைச் சேர்ந்த பிரியங்கா சர்மா என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

பிரியங்காவின் பதிவுக்கு கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து திரிணாமுல் கட்சியை சேர்ந்த ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, ஹவுரா போலீசார், பிரியங்கா சர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிரியங்கா சர்மாவுக்கு ஜாமின் வழங்க தயார். அவர் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியது.

அதற்கு, பிரியங்கா சர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது, பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது. இருப்பினும் அவரிடம் மன்னிப்பு கேட்க அறிவுரை வழங்குகிறேன்! அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறினார்.

இதை அடுத்து, பேச்சு சுதந்திரம் என்பது மற்றவரை அவமானப்படுத்துவதற்காக அல்ல எனக் கூறிய நீதிமன்றம், மீம்ஸ் வெளியிட்டதற்காக எழுத்துபூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பிரியங்கா சர்மாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.priyanka sharma - 2025

இருப்பினும் நெட்டிசன்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மோடிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்று பொங்குகின்றனர். ஒரு நாட்டின் பிரதமர் மோடியைக் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும் கேவலமாகவும் சித்திரித்து மீம்ஸ்கள் கார்டூன்கள் வெளியிட்டனர். ஆனால் அது குறித்தெல்லாம் கவலைப்படாத கண்டுகொள்ளாத உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தன்னுடைய ஒரு தலைப் பட்சமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.

பிரியங்கா மன்னிப்பு கேட்கக்கூடாது என்றும், இது உச்ச நீதிமன்றத்துக்கு அவமானம், கேவலம் இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தை உச்ச நீதிமன்றம் தகர்த்தெறிந்துவிட்டது என்றும் கருத்துகளை பலரும் டிவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories