சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பணத்துக்காகவோ, பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டோ வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார்.