‘மரணம் எங்கள் இலக்கு’ – வாட்ஸ்அப் குழுவில் பேச்சு: நீங்கள் எங்கள் இலக்கு – என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

nia office - 2026

திங்கள் கிழமை இன்று காலை தேசிய புலனாய்வு முகமையினர் கடலூரில் திடீரென சோதனை மேற்கொண்டனர். காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் ரஷீத் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை மேற்கொடு, ஒரு லேப்டாப், 4 பென்டிரைவ், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை, கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் (என்.ஐ.ஏ.,) சோதனை நடத்தினர். இதில், பல்வேறு பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ‘மரணம் எங்கள் இலக்கு’ என்று ஒரு ‘வாட்ஸ் ஆப்’ குழுவைத் தொடங்கி, அதன் வழியே பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை இந்தக் குழுவில் உள்ளவர்கள் பரிமாறி வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் குழுவைச் சேர்ந்த சிலரை போலீசார் கண்காணித்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., கூடுதல் விசாரணை மேற்கொண்டது. இந்தக் குழுவில் உள்ளவர்களுக்கு தமிழகத்தில் தேசவிரோத, பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், இன்று 10 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, கீழக்கரை, தேவிப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சந்தேக நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள்
அங்கிருந்த எலக்ட்ரானிக் சாதனப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளிட்ட சிலவற்றைக் கைப்பற்றினர். அவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories