தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகிய இருவர் முதலிடம் !

Published:

 

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த தேர்வில் 1195 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த தேர்வில் 1195 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்து 650 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவு இன்று காலை 10.31 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பெறுவதற்கும் மறு கூட்டலுக்கும் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அவற்றை பயன்படுத்தி கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவை மதிப்பெண்களுடன் இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். முடிவை தெரிந்துகொள்ளும் இணையதள முகவரிகள் வருமாறு:-

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் வரும் 25-ந்தேதி வெளியிடப்படுகிறது.

பிளஸ்-2 தேர்வில் வெற்றியை பிடித்த மாணவர்கள் அனைவருக்கும் www.dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் சார்பில் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img