ஸ்டாலினிடம் ’இதை’ நான் எதிர்பார்க்கவே இல்லை: கஸ்தூரி!

kasthuri - 2026
ஸ்டாலினிடம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமூக செயற்பாட்டாளரான நடிகை கஸ்தூரி!

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  “மீண்டும் மோதி!” என்ற முழக்கத்தை முன்வைத்து,  தேர்தலை சந்தித்தது பாஜக.,! கடந்த 5 வருடங்களில் மோதி மேற்கொண்ட திட்டங்கள் ஏராளம். வரிகளை கறாராக வசூலித்து, வரி ஏய்ப்பாளர்களை சரியாக கண்டறிந்து, அவற்றின் மூலம் நாட்டின் நிதி நிலையை உயர்த்தி, அந்த நிதியை ஏழைகளுக்கான நலத் திட்டங்களுக்கு அதிகம் பயன்படுத்திக் கொண்டார் என்று வட நாட்டு மக்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றனர்.

மோடியின் திட்டங்களில் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தின் மூலம் பயன் அடைந்த கிராமப் பெண்கள் மோடிக்கு பெரும் நன்றியைத் தெரிவித்துள்ளனர். காரணம், கழிவறைகள் இல்லாமையால், பொது இடங்களில் அல்லது பொதுவெளியில் செல்லும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் அவலம் கிராமப் புறங்களில் இருந்தது. இதனை நீக்குவதற்காகவும், பெண்கள் கவுரவமாக வாழ வேண்டும் என்பதற்காகவுமே ஸ்வச் பாரத் என்ற தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான கழிவறைகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப் பட்டன.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெகுதொலைவு நீர்க் குடங்களை சுமந்து சென்று, தண்ணீர் பிடித்து வீட்டுக்குக் கொண்டு வரும் பெரும் பணியை குடும்பத்தின் பெண்களே செய்து வந்தார்கள். அவர்களுக்கு இதனால் பல மணி நேரம் வீணாகிறது. உடல் வலியும் ஏற்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நீர் வளத் திட்டங்களை செயல்படுத்தினார் மோதி. தொடர்ந்து தனது அடுத்த 5 ஆண்டு ஆட்சியில் நதி நீர் இணைப்பு, அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்குதல் இவற்றை நிறைவேற்றப் போவதாகக் கூறியிருந்தார்.

மோதியின் இத்தகைய திட்டங்கள் பெண்களை உளவியல் ரீதியாக வெகுவாகக் கவர்ந்தன. இதன் எதிரொலிப்புதான் இந்த முறை ஆண்களுக்குச் சமமாக பெண்களும் அதிக அளவில் வெளிவந்து வாக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பாஜக., வெற்றிக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களே காரணம் என்றும், தமிழகத்தில் அதற்கு வெற்றி கிட்டவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார் திமுக.,வின்  ஸ்டாலின்.

இதற்கு தனது டிவிட்டர் பதிவில் பதில் கொடுத்திருக்கிறார் கஸ்தூரி. அதில்…

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

“இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல” – மு.க.ஸ்டாலின் … அட ஆமாம், கோவா குஜராத் கர்நாடகம் ஒடிஷா வடகிழக்கு காஷ்மீர் வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் , ஏன், ஆந்திராவும் இந்தியாதான் ! இதை திரு ஸ்டாலின் தானாகவே மனமுவந்து சுட்டிக்காட்டுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை !

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories