December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

ஸ்டாலினிடம் ’இதை’ நான் எதிர்பார்க்கவே இல்லை: கஸ்தூரி!

kasthuri - 2025
ஸ்டாலினிடம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமூக செயற்பாட்டாளரான நடிகை கஸ்தூரி!

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  “மீண்டும் மோதி!” என்ற முழக்கத்தை முன்வைத்து,  தேர்தலை சந்தித்தது பாஜக.,! கடந்த 5 வருடங்களில் மோதி மேற்கொண்ட திட்டங்கள் ஏராளம். வரிகளை கறாராக வசூலித்து, வரி ஏய்ப்பாளர்களை சரியாக கண்டறிந்து, அவற்றின் மூலம் நாட்டின் நிதி நிலையை உயர்த்தி, அந்த நிதியை ஏழைகளுக்கான நலத் திட்டங்களுக்கு அதிகம் பயன்படுத்திக் கொண்டார் என்று வட நாட்டு மக்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றனர்.

மோடியின் திட்டங்களில் இலவச கழிப்பறை கட்டும் திட்டத்தின் மூலம் பயன் அடைந்த கிராமப் பெண்கள் மோடிக்கு பெரும் நன்றியைத் தெரிவித்துள்ளனர். காரணம், கழிவறைகள் இல்லாமையால், பொது இடங்களில் அல்லது பொதுவெளியில் செல்லும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் அவலம் கிராமப் புறங்களில் இருந்தது. இதனை நீக்குவதற்காகவும், பெண்கள் கவுரவமாக வாழ வேண்டும் என்பதற்காகவுமே ஸ்வச் பாரத் என்ற தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான கழிவறைகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப் பட்டன.

குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெகுதொலைவு நீர்க் குடங்களை சுமந்து சென்று, தண்ணீர் பிடித்து வீட்டுக்குக் கொண்டு வரும் பெரும் பணியை குடும்பத்தின் பெண்களே செய்து வந்தார்கள். அவர்களுக்கு இதனால் பல மணி நேரம் வீணாகிறது. உடல் வலியும் ஏற்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நீர் வளத் திட்டங்களை செயல்படுத்தினார் மோதி. தொடர்ந்து தனது அடுத்த 5 ஆண்டு ஆட்சியில் நதி நீர் இணைப்பு, அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்குதல் இவற்றை நிறைவேற்றப் போவதாகக் கூறியிருந்தார்.

மோதியின் இத்தகைய திட்டங்கள் பெண்களை உளவியல் ரீதியாக வெகுவாகக் கவர்ந்தன. இதன் எதிரொலிப்புதான் இந்த முறை ஆண்களுக்குச் சமமாக பெண்களும் அதிக அளவில் வெளிவந்து வாக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பாஜக., வெற்றிக்கு ஹிந்தி பேசும் மாநிலங்களே காரணம் என்றும், தமிழகத்தில் அதற்கு வெற்றி கிட்டவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார் திமுக.,வின்  ஸ்டாலின்.

இதற்கு தனது டிவிட்டர் பதிவில் பதில் கொடுத்திருக்கிறார் கஸ்தூரி. அதில்…

“இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல” – மு.க.ஸ்டாலின் … அட ஆமாம், கோவா குஜராத் கர்நாடகம் ஒடிஷா வடகிழக்கு காஷ்மீர் வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள் , ஏன், ஆந்திராவும் இந்தியாதான் ! இதை திரு ஸ்டாலின் தானாகவே மனமுவந்து சுட்டிக்காட்டுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை !

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories