நீண்ட இடைவெளிக்கு பின்னர் கஸ்தூரிராஜா இயக்கும் புதிய படம்

Published:

jackiesheroff - 2026என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோயிலிலே, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை ராசாவே உள்பட பல கிராமிய படங்களை இயக்கியவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. தனது மகன்கள் தனுஷ், செல்வராகவன் திரையுலகில் பிரபலமான பின்னர் படங்கள் இயக்குவதை நிறுத்தி கொண்ட கஸ்தூரி ராஜா தற்போது ‘பாண்டிமுனி’ என்ற பேய்ப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படம் குறித்து கஸ்தூரிராஜா கூறியதாவது: இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது. சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பாண்டிமுனி படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கிஷெராப், அறிமுக நாயகி மேகாலி, இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல் மற்றூம் பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார்.

Related articles

Recent articles

spot_img