
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை என மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் நிறுவனருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் ராணுவத்துக்கு ஒரு லட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபாகரன் உடலை கொழும்புக்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பிக்கவில்லையே ஏன்? கொல்லப்பட்டதாகக் கூறி காட்டப்பட்ட உடல் அவருடையதே இல்லை.
பிரபாகரன் உடலை கொழும்புக்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பிக்கவில்லையே ஏன்? கொல்லப்பட்டதாகக் கூறி காட்டப்பட்ட உடல் அவருடையதே இல்லை.
இலங்கையில் டிஎன்ஏ சோதனை செய்ய வசதி இல்லை என்று ராஜீவ் காந்தி உடலை அடையாளம் காட்டிய டாக்டர் சந்திரசேகர் தெரிவித்துள்ள நிலையில், பிரபாகரன் உடலை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

