அன்று.. ‘அஞ்சா நெஞ்சன்’! இன்று ‘கெஞ்சும் நெஞ்சன்’! பாவம் அழகிரி ‘ஆதரவாளர்கள்’!

alagiri1 - 2026

தங்க தமிழ்ச்செல்வன் இன்று திமுக.,வில் சேர்ந்த நிலையில், பெரும் காயப் பட்ட மனத்துடன் கனத்த இதயத்துடன் காட்சிகளைக் கண்டு கொண்டிருக்கின்றனர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்.

காரணம், மு.க.அழகிரி திமுக.,வில் செல்வாக்குடன் இருந்திருந்தால், தாங்களும் நல்ல செல்வாக்குடன் வலம் வரலாம் என்று காத்திருந்தனர். ஆனால், காலம்தான் கடந்து கொண்டிருக்கிறதே தவிர அதற்கான எந்த வெளிச்சக் கீற்றும் அவர்களின் கண்களுக்கு முன் படவே இல்லை.

தங்க தமிழ்ச்செல்வனை எல்லாம் கட்சியில சேர்த்துப்பாய்ங்களாம்… சொந்த சகோதரனை சேர்த்துக்க மாட்டாய்ங்களாம்… – என்று ப சச்சிதானந்தன் என்பவர் பேஸ்புக்கில் ஒரு கருத்துப் பதிவிட, அது அழகிரி பெயரிலான பேஸ்புக் பக்கத்தில் பகிரப் பட்டுள்ளது.

பொதுவாக அழகிரி பேஸ்புக், டிவிட்டர் என எதிலும் வருவதில்லை. ஆனால் அவரது பெயரில் அழகிரியின் தகவல்களைப் பகிர என்றே அவரது ஆதரவாளர்கள் ரொம்பவும் ஆக்டிவாக சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர்.alagiritweet - 2026

ஒரு காலத்தில் போஸ்டர் என்றாலும், சுவர் விளம்பரங்கள் என்றாலும், பேனர்கள் என்றாலும் அது மதுரைதான் என்று கெத்து காட்டி வந்தார்கள் அழகிரி ஆதரவாளர்கள். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் வாசகங்கள் எல்லாம் அதிரடி அதிர்வேட்டுகளாக, கவர்ச்சிகரமானவையாக இருக்கும். அந்த வாசகங்களுக்காகவே அந்த விளம்பரங்கள் பெரும் அளவில் மக்களிடம் பரப்பப் பட்டிருக்கும்.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

தற்போது, அழகிரி எந்த வித முக்கியத்துவமும் இன்றி, வெளியுலகம் நினைத்துக் கூடப் பார்க்க எந்த செய்தியும் இன்றி அமைதியாக ஓர் ஓரத்தில் ஒதுங்கி இருந்து வருகிறார். அதே நேரம், திமுக., இப்போது ஆர்ப்பாட்டத்தில் திளைத்து வருகிறது.

மதுரைக்கு தெற்கே திமுக.,வில் அழகிரி வைத்ததுதான் சட்டம் என்று இருந்த நிலை மாறி இப்போது திமுக., பரவலாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், அழகிரியைச் சீண்டுவாரும் இல்லாமல் போய்விட்டது.

mkalagiri - 2026

இந்த நிலையில்தான் தற்போது வரிசையாக திமுக.,வை திட்டித் தீர்த்து அரசியல் செய்து கொண்டிருந்த மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் திமுக.,வில் இணையும் போது, அண்ணன் அழகிரிக்கு மட்டும் இடமில்லையா என்று உள்ளக் குமுறலை வெளியிடுகின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.

அதன் வெளிப்பாடாகவே, சமூக வலைத்தளங்களில் தற்போது, தங்க தமிழ்ச்செல்வனை எல்லாம் சேர்த்துப்பானுங்களாம்…சொந்த அண்ணனை மட்டும் சேர்த்துக்க மாட்டாய்ங்களாம் என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்தி கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்!

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories