December 6, 2025, 10:33 PM
25.6 C
Chennai

“அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்.. ஒரே ஒருதடவை…”-வயோதிகர்.

12957391_1335113029837652_1819172567_n

“அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்..

ஒரே ஒருதடவை…”-வயோதிகர்.

(‘யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.’

அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை)

2014-போஸ்ட் மறுபதிவு


சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
 
முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே
போகமுடியாது. ஆட்டோ,டாக்ஸியில் போகலாமே
என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.
 
நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது –
‘அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்..
ஒரே ஒருதடவை…”
 
வெறும் பகற்கனவு என்பது அவருக்கே புரிகிறது.
ஆனால், நாள் ஆக ஆக, தவிப்பும் வளர்ந்துகொண்டே
போயிற்று.
 
வாசற்படியிலே, காலடிச் சத்தம் கேட்டாலே,

‘அவன் தானோ?’ என்ற திகில்.

‘போகவேண்டியிருக்கிறதே?’ என்ற அச்சம் இல்லை; ‘தரிசிக்காமல் போகிறோமே!’ என்ற ஏக்கம்.

 
ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம்.
 
ஆமாம், காலடிச் சத்தம்.
 
“உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி
பெரியவா உத்திரவு…” என்றார் வந்தவர்.
 
வயோதிகரின் ஆத்மா சிலிர்த்தது.
‘நான் எனக்குள்தானே பேசிக்கொண்டேன்?
அதெப்படி பெரிவாளுக்குக் கேட்டிருக்கும்.?’
 
‘நான் என்ன பண்டிதனா? அக்னிஹோத்ரியா?
இல்லை, அமைச்சரா? அரசியல் தலைவனா?
எப்போதோ ஒரு தேங்காயைச் சமர்ப்பித்து,
நமஸ்காரம் செய்த நினைவு. நெஞ்சில் பதிந்த
திருவுருவம், காலத்தால் மறைந்துவிடவில்லை.’
 
மடத்துப் பணியாளர், ” என் தோளைப் புடிச்சிண்டு
நடந்துவந்து கார்லே ஏறிக்கிறேளா?” என்றார்.
 
“கார்! ‘விமானத்தையல்லவா எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன்!’
 
இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சென்றடைந்த
சமயத்தில், பெரியவா அன்னை காமாக்ஷி கோயிலில்
இருந்தார்கள்.
 
“அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா?”
என்றார் சிப்பந்தி.
 
“முதல்லே, பெரியவா தரிசனம்….அப்புறமா…”
 
பெரியவாள் திருமுன்னிலையில் போய் நின்றார்.
பேச்சு வரவில்லை. கண்கள் பேசிக்கொண்டன.
ஒரு வழியாகச் சமாளித்துக்கொண்டு, பெரியவாளுக்கு
நமஸ்காரம் செய்தார்.
 
ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.
 
பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக்
கொடுத்து,அந்தச் சரீரத்தின்மேல் போர்த்தச் சொன்னார்கள்.
 
மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளை
செய்யும்படி உத்திரவாயிற்று.
 
“முதல்லே, பெரியவா தரிசனம்; அப்புறமா…”
 
அப்புறமா அம்பாளை தரிசித்துக் கொள்ளலாம்-
என்று சொல்லத்தானே விரும்பினார்.
 
அவர் விருப்பம் நிறைவேறிவிட்டது.
 
அரைமணி கழித்து, அவர் ‘விமான’த்தில் பயணித்துக்
கொண்டிருந்தார் – அம்பாளை தரிசிக்க.
 
இனி, எந்த ஒரு தாயின் ‘கர்ப’மும் அவருக்குக்
‘கிருஹம்’ ஆக முடியாது!
 
‘யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.’
 
அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories