ஆவணி அவிட்டம் அப்பம்-போளி
உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
தூளாக்கிய வெல்லம் – முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் – கால் கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு இவற்றை ஒருமணிநேரம் ஊறவைத்துக் கழுவி தேங்காய்த் துருவலையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை குழிப்பணியாரத் தட்டில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.
குறிப்பு: ஆவணி அவிட்டத்தன்று முதன்முதலில் பூணூல் போடும் சிறுவர்களுக்கு இந்த அப்பத்தை தருவதால், இதற்கு ‘பிரம்மச்சாரி அப்பம்’ என்று பெயர்.
கேசரி கலர் – ஒரு சிட்டிகை
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
வெள்ளை ரவை – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய், எண்ணெய் கலந்து – 3 டேபிள்ஸ்பூன்
துருவிய வெல்லம் – ஒன்றரை கப்
துருவிய தேங்காய் – கால் கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
மைதா, உப்பு, கேசரித்தூள், வெள்ளை ரவை, வெண்ணெய், எண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்றுத் தளர்த்தியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப் பருப்பை அளவான தண்ணீர் விட்டு (சுண்டல் பதத்துக்கு) வேகவைத்து தேங்காய், வெல்லம், சேர்த்து மீண்டும் கொதித்து வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்தால் பூரணம் தயார். பூரணம் தளர்வாக இருந்தால் மட்டும் வாணலியில் போட்டுப் புரட்டவும். ஆறியதும் இறுகிவிடும்.
வாழை இலையின் மேல், மாவை ஒரு சிறிய உருண்டை அளவு எடுத்துத் தட்டி பூரணத்தை வைத்து மீண்டும் உருண்டையாகப் பிடித்து வைத்து மூடி போளியாகத் தட்டி தவாவில் இட்டு ஓரங்களில் எண்ணெய், நெய் கலந்த கலவையை ஒரு டீஸ்பூன் ஊற்றி, ஒருபுறம் வெந்ததும், திருப்பிப்போட்டு எடுத்தால் போளி தயார்