உருண்டை சாப்பிட்ட பெரியவர் (என்ன உருண்டை?)

14068239_1173100256096203_8568254516089731569_n

உருண்டை சாப்பிட்ட பெரியவர்
(என்ன உருண்டை?)
டிச. 2013 தினமலர்
.
காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது ஒரு மூதாட்டி வந்தார்.
“”பெரியவா! என் கணவர் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தார். என் மகளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டேன். வருங்காலத்தில் என் சொத்தையெல்லாம், தர்ம காரியங்களுக்கு செலவிட விரும்புகிறேன்,” என்றார். அதற்குரிய நேரம் வரும் போது, இதுபற்றி பதில் தெரிவிப்பதாக பெரியவர் பதிலளித்தார்.
கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற பெரியவர், மூதாட்டியின் நினைவு வர, மடத்திற்கு அழைத்து வரச் சொன்னார். அவரிடம், காஞ்சிபுரத்திலுள்ள சில கோயில்களுக்கு திருப்பணியும், வேத பாடசாலைக்கு நிதியுதவி செய்யும் படியும் கூற, அதை அந்த அம்மையார் நிறைவேற்றினார். அதன்பின், மடத்திலேயே தங்கி பெரியவரை தினமும் தரிசனம் செய்து வந்தார். ஒருமுறை, அந்த மூதாட்டி, தான் தயாரித்த, சத்துமாவு உருண்டையை ஏற்று உண்ண வேண்டும் என பெரியவரிடம் வேண்டிக் கொண்டார். மகாபெரியவரும் மகிழ்ச்சியுடன், அதில் சிறிது மட்டும் எடுத்து உருண்டைகளாக்கி சாப்பிட்டார்.
மீதியை அவரிடமே கொடுத்து விட்டார். அன்று நாள் முழுவதும் பெரியவர் பிட்சை ஏற்கவில்லை.
பெரியவரின் வழக்கத்திற்கு மாறான இந்தச் செயல் மடத்திலுள்ள ஊழியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஊழியர் மட்டும் பெரியவர் அருகே சென்றார். அப்போது, பெரியவர் , சிறு சிறு உருண்டைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட ஒரு ஊழியர், “”பெரியவா! இன்னுமா அந்த சத்துமாவை சாப்பிடுறீங்க!” எனகேட்டார்.
“”டேய்! சத்துமாவு ருசியாக இருந்தது. அதனால், அதை விரும்பி சாப்பிட்டேன். ஆனா, நாக்கு கேட்கும் போதெல்லாம் ருசியானதை சாப்பிட்டு கிட்டே இருக்கக்கூடாது. அதனாலே, அந்த ருசியை மாற்றக்கூடிய வகையிலே, சாண உருண்டையை சாப்பிட்டேன். சாண உருண்டை சாப்பிட்டா, எதையும் சாப்பிடத் தோன்றாது. சாப்பிட்ட உணவும் செரித்து விடும்” என்றார்.
உணவு விஷயத்தில், மனிதர்கள் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல. பசுஞ்சாணத்தின் மகத்துவத்தையும் மக்களுக்கு அவர் போதித்தார்.
ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories