ஸ்வாமி ஓங்காராநந்தர் – சத்தமில்லாமல் ஒரு சாதனை!

pujyasri omkarananda
pujyasri omkarananda

ஸ்வாமிஜியின் மறைவு பேரதிர்ச்சி தருவது. மிகுந்த துக்கம் தரும் நிகழ்வு. ஹிந்து தர்மத்துக்குப் பேரிழப்பு.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. பூஜ்ய ஸ்வாமிஜியின் தனித்துவம் என்பது அவரது குரல், வேதத்தின் கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகிய இரண்டு பெரும் பிரிவுகளிலும் ஆழ்ந்த ஞானம், ஸம்ஸ்க்ருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நிபுணத்துவம் முதலானவை.

குறிப்பாக, சமீபகால தமிழகத்தில் திருக்குறளில் காணப்படும் வேதாந்தக் கருத்துகளையும் சாஸ்திரக் கருத்துகளையும் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறியது ஸ்வாமிஜி மட்டுமே. இதை அவர் ஆவணப்படுத்தியும் இருக்கிறார். இதற்காக, ஸ்வாமிஜிக்கு ஹிந்துக்கள் அனைவரும் – குறிப்பாக, தமிழ்நாட்டு ஹிந்துக்கள் – மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

ஸ்வாமிஜி அவர்களின் இந்தத் தொகுப்பு திருக்குறள் தியானம் என்ற பெயரில் கையடக்க நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அறத்துப் பால், பொருட்பாலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 365 திருக்குறள்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு குறளுக்கும் ஒத்த பொருளுடைய மேற்கோள்கள் அந்தக் குறளின் கீழேயே தரப்பட்டுள்ளன. இந்த மேற்கோள்கள் வேத மந்திரம், புராண இதிகாசங்களில் இடம் பெற்றுள்ள சுலோகங்கள் அல்லது தர்ம சாஸ்திர நூல்களில் உள்ள கருத்துகள் முதலானவை. இவை அனைத்தும் ஸம்ஸ்க்ருத நூல்களில் இருந்து திரட்டப்பட்டவை என்பதும், இந்த நூல்கள் அனைத்தும் திருவள்ளுவர் காலத்துக்கு முற்பட்டவை என்பதும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

omkarananda1
omkarananda1

இந்த தேசத்தின் ஒட்டுமொத்த ஆன்மிக சிந்தனையையும், தார்மிக வாழ்க்கையையும், தத்துவ மேம்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட நூல் திருக்குறள் என்பதை இந்தத் தொகுப்பு ஆணித்தரமாக நிரூபிக்கிறது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

ஸ்வாமிஜி மறைந்திருக்கலாம். ஆனால், தாம் என்ன செய்ய வேண்டுமோ, அந்தப் பணியை இந்த நூலின் மூலம் அவர் முழுமையாகவே நிறைவேற்றி இருக்கிறார்.

திருவள்ளுவருக்கு நாஸ்திகச் சாயம் பூசுவதும் திருக்குறளுக்கு பைபிள் அட்டை போடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருபவைதான். இத்தகைய முயற்சிகள் ஆஸ்திகர்கள் யாரையும் குழப்பப் போவதில்லை. எனினும், தற்காலத்திய இளைய தலைமுறையினர் – குறிப்பாக, வெளிநாடு வாழ் தமிழர்கள் – இவற்றுக்கு பலிகடா ஆகிறார்கள். திருக்குறள் மீது சிறிதும் பக்தி இல்லாமல், அதைப்பற்றி வாய்க்கு வந்த விதத்தில் பேசுபவர்களுக்கு நாம் பதில் சொல்வது வீண் வேலை. அதேநேரத்தில், நம் வீட்டுப் பிள்ளைகள் மனதில் திருக்குறள் குறித்த உண்மையான பார்வையை ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த விஷயத்தில் ஸ்வாமிஜி நமக்கு அருளியிருக்கும் இந்தத் தொகுப்பு மகத்தானது.

மிகவும் உணர்ச்சிகரமான இந்தச் சமயத்தில் இந்தத் தொகுப்பைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது ஸ்வாமிஜியின் தனித்துவம் பற்றியது. ஆம், அவரது பல்துறை அறிவு, நினைவாற்றல், சிந்தனை ஆழம் ஆகிய அனைத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் இந்தத் தொகுப்பு.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

ஸ்வாமிஜியின் நினைவுகளுடனும், நன்றியறிதல்களுடனும்,

  • வேதா டி. ஶ்ரீதரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories