ஏழைகளின் மருந்தகம்… மக்கள் மருந்தகம்!

bharatiya jana aushadi - 2026

மார்ச் 7ஆம் தேதி இந்திய நாடே மக்கள் மருந்தகம் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள் இன்று. உலக அளவில் இந்தியா ஒரு புரட்சியை ஏற்படுத்திய நாள் இன்று.

மக்களின் அன்றாட தேவையாக மாறி விட்ட மருந்துகளை மலிவு விலையில் வாங்க மகத்தான திட்டம் பிறந்த தினம் இன்று.

இந்தியாவில் சுமார் 8500 க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் என்ற மலிவு விலை மருந்துக் கடைகளும், தமிழகத்தில் 822 மக்கள் மருந்தகங்களும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் வாரம் 1-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை மக்களுக்கு மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு மக்கள் மருந்தகம் தினத்தை மார்ச் 7 ஆம் தேதி அன்று கொண்டாடி வருகிறது.

செல்வந்தர்களுக்கு எல்லா மருந்தும் எளிதாக கிடைத்துக் கொண்டிருந்தது. அவர்களால் எந்த மருந்தையும் எந்த விலைக்கும் வாங்க முடிந்தது. ஆனால், நம் பாரத பிரதமர் அவர்கள், நம் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழைகளையும் பற்றித்தான் மிகவும் கவலைப்பட்டார். அவர்களுக்கெல்லாம் குறைவான விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்று அவர் சிந்தித்தது இன்று உலகமே பார்த்து வியக்கும் சாதனை திட்டமாக விரிவடைந்திருக்கிறது.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

மகாகவி பாரதியார் அவர்கள் தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதியின் வழியில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும் மனிதனுக்கு மருந்து கிடைக்கவில்லை எனில் மலிவு விலை மருந்தகம் திறந்து விடுவோம் என்று பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஓஷதிய பரியோஜனா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இது சாதாரண திட்டம் அல்ல. உலகின் வல்லமை படைத்த மருத்துவ நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை வரவேற்கவில்லை. இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் மிக அதிகமான லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்த அந்த நிறுவனங்கள் இந்தத் திட்டங்கள் வெற்றி பெற்றால் அவர்களின் லாபங்கள் பாதிக்கப்படும் என்று அஞ்சினார்கள். இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு வெளிச் சந்தையில் விற்கும் மருந்துகளை அதன் விலையில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவாக மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்கிறார்கள்.

ஒரு குடும்பமும் ஆயிரக்கணக்கில் இதனால் மருந்து செலவில் மிச்சம் பிடிக்க முடிகிறது. சேமிக்க முடிகிறது. Money that is saved is equal to the money that is earned. என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் இந்த மக்களுக்கு மருத்துவச் செலவில் மிகப்பெரிய அனுகூலத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்த அழுத்தம் இருதயம் சம்பந்தப்பட்ட பல தீவிரமான நோய்களுக்கும் ஆயிரக்கணக்கான மருந்துகள் இந்த மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

ஏறத்தாழ 1451 மருந்து வகைகள் இங்கே கிடைக்கின்றன. இரு நூற்று நாற்பத்தி ஒரு மருத்துவ உபகரணங்களும் இங்கே கிடைக்கின்றன. வலி நிவாரணத்திற்கு ஸ்பிரே, உடல் நலத்திற்கான பானங்கள், மற்றும் அனைத்து வகையான ஜெனரிக் மெடிசன் எனப்படும் மரபு சார்ந்த மருந்து வகைகள், விற்பனைக்கு உள்ளன.

நடப்பாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய்க்கும் மேல் இதுவரை மருந்து வர்த்தகம் இந்த மக்கள் மருந்தகங்கள் மூலம் நடைபெற்றுள்ளது. மருந்து பொருட்கள் மற்றும் இன்றி மருத்துவ உபகரணங்கள் ஆகிய பொருட்களை வாங்கியதில் மட்டும் ஏறத்தாழ 4000 கோடி ரூபாய் சேமித்து உள்ளனர்.

இந்தத் திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை மக்களுக்கு சேமிப்பு குறியீடு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று அளவிடப்பட்டுள்ளது. தமிழக மக்களை ‘ம­க்கள் மருந்தகங்களை’ பயன்படுத்திக் கொள்ளவும், தகுதியுள்ளவர்கள் ‘மக்கள் மருந்தகங்களை’ தொடங்கி நடத்தவும் நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனை, மக்களின் தேவைகளை, மக்களின் எதிர்பார்ப்புக்களை, ஆழமாக சிந்தித்து, அதை நடத்திக் காட்டிக் கொண்டிருக்கும், நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • கே. அண்ணாமலை
    (மாநிலத் தலைவர், பாஜக., தமிழகம்)
ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories