திருப்பாவை பாசுரம் 17 (அம்பரமே தண்ணீரே)

thiruppavai pasuram 17 - 2026

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரமூ டறுந் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

kovil p17 - 2026

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில், நந்தகோபனின் இல்லத்தே வாசலில் நின்றபடி, மாளிகை உள்ளே புக வாசல்காப்போனின் அனுமதியைக் கோரினார்கள் ஆய்ச்சியர்கள். பின்னர் உள்ளே புகுந்த அவர்கள், நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் என அனைவரையும் துயில் எழுப்புகிறார்கள் இந்தப் பாசுரத்தில்.

உடலுக்குக் காப்பாகும் துணிமணிகள், உயிர்க்குத் தேவையாகும் தண்ணீர், உரமூட்டும் உணவு என உயிர்வாழ அவசியத் தேவையான அனைத்தையும் வேண்டியன வேண்டியபடி தானமாக வழங்கும் வள்ளல் ஸ்ரீநந்தகோபர்.

எங்கள் அனைவருக்கும் தலைவராகத் திகழ்பவர். அப்படிப்பட்ட நந்தகோபரே நீங்கள் முதலில் துயில் எழ வேண்டும். வஞ்சிக்கொம்பு போன்ற மாதர்களுக்கு எல்லாம் முதன்மையானவளாகத் திகழ்பவளே!

இந்தக் குலத்துக்கு மங்கள தீபம் போல் விளங்கும் எங்கள் தலைவி யசோதைப் பிராட்டியே… பள்ளி உணர்ந்து எழு! ஆகாயத்தை இடைவெளியாக்கிக் கொண்டு உயர வளர்ந்து, அனைத்து உலகங்களையும் அளந்து அருளிய தேவாதி தேவனே… இனியும் கண்மூடித் துயில் கொள்ளாமல் விரைந்து எழு. சிவந்த பொன்னால் செய்த வீரக் கழல் அணிந்துள்ள திருவடியைக் கொண்ட பலராமனே! நீயும் உன் தம்பியாகிய கண்ணனும் உறங்காது துயில் கலைந்து எழுந்திடுக! என்கிறார் ஸ்ரீஆண்டாள் இந்தப் பாசுரத்தில்.

இதில், வரிசைக் கிரமமாக நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் என நால்வரையும் துயில் எழுப்புகிறார்கள். கண்ணனுக்கு பாதுகாப்பாக ஒருபுறம் நந்தகோபரும், மறுபுறம் பலராமனுமாகப் படுத்துக் கொள்வார்களாம்.

உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்றபடி இருக்கும் எங்களுக்கு அம்பரமும் தண்ணீரும் சோறுமாகவுள்ள கண்ணனை எமக்குத் தந்து எங்கள் குறையைப் போக்கும் ஸ்வாமி நீர் அன்றோ என்று நந்தகோபரை இந்தப் பெண்கள் எழுப்புகிறார்களாம்!

விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories