பாரதிக்கு அடியேனின் அஞ்சலி!
அடியேன் இல்லத்தே மேஜைக் கணினிக்கு சற்று மேலே மாட்டப்பட்டிருக்கும் ஆதர்ஷ புருஷர்களின் படங்கள் இவை. ஒருவர் மகாகவி- பாரதி! மற்றொருவர் வீரத்துறவி விவேகானந்தர். இன்று மகாகவி நினைவாக, அவருக்கு அடியேன் இல்லத்தே ஒரு சிறு நினைவு அஞ்சலி நடத்தினேன். எல்லாம் தனியாகத்தான்!
இந்தப் படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பாரதியின் இந்தப் படத்தை அடியேனுக்கு அளித்தவர், மஞ்சரியில் அடியேனுக்கு முன்னர் ஆசிரியராக இருந்த லெமன் என்கிற லட்சுமணன் ஐயா! பாரதியின் இந்தப் படம் ஆர்யா வரைந்தது என்பது அவர் அடியேனுக்குச் சொன்ன தகவல்.
இன்னொரு சிறப்பு: சென்ற மாதம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, சந்நிதியில் அடியேனுக்கு அளித்த சுவாமியின் வெட்டி வேர் மாலையினை இல்லத்தில் பத்திரமாக வைத்திருந்தேன். பாரதியின் படத்துக்கு இன்று சூட்டி, வெட்டி வேர் மணம் அறையில் கமகமக்க பாரதியின் தமிழ் அறையில் எதிரொலிக்க அவரின் பாடல்களைப் பாடி, தனியொருவனாக அந்த மகாகவிக்கு அடியேனான் இயன்ற அஞ்சலியைச் செலுத்தினேன்.
வாழ்க தேசியக் கவியின் புகழ்!
பாரதிக்கு அஞ்சலி!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
மகிழà¯à®šà¯à®šà®¿.
எஙà¯à®•à®³à¯ இனிய பà¯à®¤à¯à®¤à®¾à®£à¯à®Ÿà¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®•à®³à¯.