விண்ணுலகு சென்ற தமிழ் – ஔவை நடராஜன்

avvai natarajan - 2026

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்

ஔவை நடராஜன் அவர்களின் இலக்கிய நந்தவனத்தில் இருந்து பூத்த மலர்கள் ஏராளம்! எல்லா மலர்களுமே இப்போது தமிழக மட்டுமல்லாது உலகம் எங்கும் மனம் பரப்பிக் கொண்டிருக்கின்றன…

திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம் என்று மேடைகளில் முழங்கும்பொழுது இவரின் இலக்கிய ஆளுமையைப் புரிந்து கொள்ளலாம். தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், அருட்பா என சொற்பொழிவு ஆற்றும் போது இவருடைய ஆன்மிக, சமய சன்மார்க்கப் புரிதலைத் தக்கபடி அறிந்து கொள்ளலாம்.

அரசு கோப்புக்களை எப்படி கையாளுவது?, மாநாட்டுத் தீர்மானங்களளை எப்படி அமைப்பது?, அறிக்கைகளின் சாரத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யும் வித்தைகள் என்ன? என்பதை எல்லாம் இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்… வேண்டியவைகள்.

அடுத்தவர்களின் திறமையை மதிக்கும் குணம், அதே நேரம் நல்லதை நாளெல்லாம் சொல்லுகிற வார்த்தை ஜாலம் இதெல்லாம் தமிழ் அறிஞர்களுக்கு ஔவை சொல்லிக் கொடுத்திருக்கும் பாடமாகும்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

என்னிடத்திலே அன்பு காட்டி, நல்ல விஷயங்கள் கலைமகளில் வெளியாகும் பொழுது உதவியாளர் மூலமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல முறை வாழ்த்தியிருக்கிறார். நான் கலைமாமணி விருது வாங்கிய போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை!! இன்னும் பல உயரத்தைத் தொடுவாய் என ஆசீர்வதித்தது இன்னமும் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.

முத்தமிழ் போல் மூன்று மகன்கள். மருத்துவத்தில் மாமணியாய் விளங்கிய மனைவி. சிறப்பான நல்லதொரு குடும்பம் ஔவை அவர்களின் குடும்பம். பாரம்பரியமிக்க குடும்பம். தமிழ் அறிஞர் ஔவை துரைசாமியின் ரத்தினங்கள் இவர்கள். நல்ல தமிழால் நாடெல்லாம், நாளெல்லாம் பேசி மகிழ்ந்து, மகிழ்ந்து வருகின்ற குடும்பம்.

ஔவை நடராஜன் அவர்கள் மூன்று தமிழக முதல்வர்களால் பாராட்டப் பெற்றவர். மதுரையில் ஆசிரியராக இருந்தவர்; அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு வள்ளலார் மன்றத்தின் பொறுப்பாளர் ஆனார். பின்னர் அவருடைய வாழ்க்கை ஏறுமுகம் ஆனது.

மொழி பெயர்ப்புத் துறை இயக்குனர்,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர்,தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என பல பதவிகள்ப் பெற்று ஐ.ஏ. எஸ். அந்தஸ்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராகவும் ஆனார். தமிழுக்கும்,தமிழ் சமூகத்திற்கும் ஔவை செய்த தொண்டு மகத்தானது!

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

அவருடைய மறைவு அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கேப் பெரிய இழப்புதான்!

விண்ணுலகம் சென்றிருக்கிற ஔவை நடராஜன் அங்கேயும் தித்திக்கும் தேன் தமிழில் அங்குள்ளோருக்குப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்! எங்கு சென்றாலும் தமிழைச் சுவாசிக்காமல் அவரால் இருக்க முடியாது. எல்லாம் வல்ல திருச்செந்தூர் முருகப் பெருமான் அருள் புரியட்டும்! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories